Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/"போஸ்' கொடுத்ததை தடுத்த போலீசாருடன் வாக்குவாதம்

"போஸ்' கொடுத்ததை தடுத்த போலீசாருடன் வாக்குவாதம்

"போஸ்' கொடுத்ததை தடுத்த போலீசாருடன் வாக்குவாதம்

"போஸ்' கொடுத்ததை தடுத்த போலீசாருடன் வாக்குவாதம்

ADDED : மே 25, 2010 04:03 AM


Google News

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதம் இருப்பது போல் "போஸ்' கொடுத்தவர்களை தடுத்ததால், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சோழவந்தானைச் சேர்ந்தவர் தீபா(21).

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (18). மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு எலக்ட் ரிக்கல் கம்யூனிகேஷன் படிக்கிறார். இருவரும் சோழவந்தான் கனரா வங்கியில், கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி மேலாளர் கடன் தராததால், கடந்த வாரம் கலெக்டரிடம் புகார் செய்தனர். இதன் பிறகும் கடன் தரவில்லை.வங்கி மேலாளரை கண்டித்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருவரும் உண்ணாவிரதம் இருக்க வந்தனர். அவர்களுடன்பாரத் கிஷான் மஸ்தூர் யூனியன் செயலாளர் ஜோதிராம் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள் சங்கம், இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை தடுத்த போலீசார், அவர்களை கலெக்டர் காமராஜிடம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து திரும்பினர்.பின், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பது போன்று பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு "போஸ்' கொடுத்தனர். இதை தடுத்த போலீசாருடன், அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us